(FASTGOSSIP|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயவை அறிவித்திருந்தாலும் தேர்தல் நெருங்கியவுடன் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திமா கமகே தெரிவித்தார்.
அலரிமாளிகையில் நேற்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய தற்போது கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவே வேட்பாளராக களமிறங்குவார் தெரியவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திமா கமகே தெரிவித்துள்ளார்.