(FASTNEWS|COLOMBO) – யால தேசிய வனத்தின் இரண்டு பகுதிகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுமென, தெற்கு, ஊவா வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர் பிரசன்ன விமலதாஸ தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகளின் இனப்பெருக்க செயற்பாடுகள் இடம்பெறும் குறித்த காலப்பகுதிக்குள் யால தேசிய வன வலயத்தின் 1,2 இரண்டாம் பிரிவுகள் முற்றாக மூடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.