(FASTNEWS | COLOMBO) – தற்கொலைதாரி சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற, தடை செய்யப்பட்டுள்ள ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்பைச் (JMI) சேர்ந்த ‘அபு இக்ரிமா’ எனும் புனைப் பெயர் கொண்ட ரபாய்தீன் முஹமத் அலி எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கம்பளை, வெலம்பொடயைச் சேர்ந்த குறித்த நபர் அம்பாறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரச புலனாய்வுத் தகவல் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.