(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்குமாறு இன்று(23) இடம்பெறவுள்ள ‘சஜித் வருகிறார்’ இரண்டாவது பேரணியானது மாத்தறையில் இடம்பெறவுள்ளது.
மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் இடம்பெறும் குறித்த பேரணியினை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையேற்கிறார்.
குறித்த பேரணியில் கலந்துகொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.