கல்முனையில் அனுரவின் ஆதிக்கம்

(FASTNEWS|COLOMBO) – தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் நம்பிக்கை தரும் நம்பகரமான வேட்பாளர் என குறிப்பிட்டு நேற்று மாலை கல்முனை நகரப்பகுதி, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை பகுதிகளில் இவ்வாறு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.