மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்தார் ஞானசார தேரர்

(FASTNEWS|COLOMBO) -இஸ்லாமிய வஹாப் கொள்கையை பின்பற்றும் 50க்கும் அதிகமான அமைப்புக்கள் நாட்டில் இயங்குகின்றன.அந்த அமைப்புக்கள் சவுதி அரேபியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கிடைக்க பெறும் ஆலோனைகளுக்கமைய செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

செயலமர்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில காலம் மௌனமாக இருந்த ஞானசார தேரர் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,பல வருடங்களுக்கு முன்னர் அடிப்படைவாதம் தொடர்பில் தமது அமைப்பு எதிர்வு கூறல்களை விடுத்த போதும் எந்த அரசாங்கமும் அது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படும் வரை எதிர்வு கூறல் விடுக்கப்பட்ட போது ஆட்சியிலிருநத அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.