(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துருக்கியில் பாலம் இடிந்து விழுந்து பாதசாரிகள் காயமடைந்துள்ளனர்.
வடக்கு துருக்கியின் கருங்கடல் நகரமான டெர்மில் பெய்த மழையைத் தொடர்ந்து ஒரு பாலம் இடிந்து விழுந்தது.
குறித்த பாலம் இடிந்து விழ்ந்ததில் இரண்டு பேர் ஆற்றில் விழுந்தனர்.பின்னர் ஆற்றில் விழுந்த இருவரும் சிறிய காயங்களுடன் காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாலம் இடிந்து விழும் சி.சி.டிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.