ஹொரபொத்தான, மொரவெவ பிரதேசத்தில் கடையொன்று திப்பிடித்து எரிந்துள்ளது.
இன்று அதிகாலை குறித்த கடையில் தீப்பரவியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
தீயினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை.
மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பற்றியுள்ளதாக சந்தேகிப்பதாகவும், இது தொடர்பான விசாரணைகள் ஹொரபொத்தான பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது