எமக்கு வாக்களித்த சகல மக்களுக்கும் மது நன்றி அமைச்சர் றிசாத் பதியுதீன்

திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் தமது கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், அங்கு தாம் மேலதிகமாக 2 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தால் நிச்சயம் ஒரு ஆசனத்தை கைற்றியிருப்போமென தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்.. வன்னியில் எமக்கு மற்றுமொரு ஆசனம் கிடைத்திருக்கும். 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலயே நாம் அந்த ஆசனத்தை இழந்தோம். இருந்தபோதும் எமக்கு வாக்களித்த சகல மக்களுக்கும் எமது நன்றிகளை கூறுகிறோம் என்றார்.