(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித் தொகையை 500 ரூபாவாவிலிருந்து 750 ரூபா வரை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை நேற்று(03) அங்கீகாரம் அளித்துள்ளது.
குறித்த அதிகரிப்பு ஏற்கனவே வழங்கப்பட்ட முழுத் தொகையில் 50 வீதம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.