இறுதி போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று(06) கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளிலும் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவது போட்டியில் வைட்வொஷ்ஷினை தடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

சொந்த மண்ணில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும், களத்தடுப்பில் செய்த தவறுகள் காரணமாக இலங்கை அணிக்கு தோல்வியை தழுவ நேரிட்டுள்ளது.