வேட்புமனு கோரப்படும் திகதி இன்று தீர்மானிக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதி இன்று(09) நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட சகல தேர்தல்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு கோரப்படும் திகதி இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் குறித்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.