சஜித்திற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை டிரான்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பானது பல அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளது.

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால் இந்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஹரீன் பெர்னாண்டோ, மனோகணேசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகிலவிராஜ் காரியவசம், கயந்த கருணாதிலக்க, சஜித் பிரேமதாஸ மற்றம் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளது.