(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான நேற்றைய(10) பேச்சுவார்த்தையின் போது குறித்த இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.