(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில், நாளை(16) இடம்பெறவுள்ள மத்தியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் நவீன் த சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சரின் தன்னிசையான தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.