(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்த நோக்கிய பயணித்த ரயில், மஹவ பகுதியில் வைத்து தடம்புரண்டதையடுத்து, வடக்குக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
காலை 8.20 மணிக்கு புறப்பட்ட குறித்த ரயில் பிற்பகல் 1 மணியளவில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
குறித்த ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.