ஜனாதிபதியின் உரையில் உறைந்தது சீனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றையதினம் (16) தாமரைக் கோபுர திறப்பு விழாவில் உரையாற்றிய கருத்துத் தொடர்பில் சீன தூதுவராலய அலுவலகம் அதனை அவதானித்து வருவதாகவும், வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட உரையின் மொழிபெயர்ப்பினை சீனா வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு வழங்குமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.