ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி; அதிரடி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நடைபெறும் பேச்சு வார்த்தை தோல்வி முடிந்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுகந்திர கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என சுகந்திர கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த திங்கள் அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாமரை கோபுரம் ஊழல் மோசடிகள் விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.