ஷாபி சிஹாப்தீனின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரகசிய பொலிசாரினால் தன்னை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவிக்குமாறு கோரி குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணையினை எதிர்வரும் ஜனவரி மாதம் 24ம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று(27) தீர்மானித்துள்ளது.

குறித்த மனு விசாரணையானது புவனக அலுவிஹார மற்றும் முர்து பெர்னாண்டோ தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.