எல்பிட்டிய தேர்தல் – 50 சதவீதமான வாக்குகள் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இதுவரை 50 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நடவடிக்கைகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருதவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தேர்தலுக்காக எல்பிட்டி பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.