மட்டக்குளி மற்றும் கம்பஹா பகுதிகளில் வெடிகுண்டு; பொலிஸார் தெரிவித்த விசேட அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – மட்டக்குளி மற்றும் கம்பஹா பகுதிகளில் வெடிகுண்டு வதந்திகள் பரப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிர​தேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வதந்திகள் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு யூடிவி செய்தி பிரிவுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளது.