இடியுடன் கூடிய மழை தொடரும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை இன்றும்(19) நாளையும்(20) மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வட மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறித்த திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.