மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ராஜாங்கணை, தெதுரு ஓயா மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனபடி, ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், தெதுரு ஓயாவின் நான்கு வான் கதவுகளும் திறக்கபப்ட்டுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.