(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ந்து பத்தாவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு இன்று(21) கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
55 நாடுகளின் 12 சர்வதேச அமைப்புகளின் மற்றும் 03 பாதுகாப்பு துறை பொருட்கள் தொடர்புடைய நிறுவனங்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடல் பாதுகாப்பு நிபுணர்களின் பங்கேற்புடன் ‘ஒரு புதிய சிந்தனையுடன் தசாப்தத்தின் மீளாய்வு’ என்ற கருப்பொருளின் கீழ் இன்றும் நாளையும் இம்மாநாடு நடைபெறவுள்ளது.