எவ்வித பயங்கரவாத அவதானமும் இல்லை – ஜனாதிபதி செயலகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் அவசர மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் நிலவுவதாக மேற்கோள்காட்டி சில அரச நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், பொதுமக்களை தேவையற்ற முறையில் அச்சம் கொள்ளச் செய்யும் வகையிலான கடிதங்களை வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இப்போது நாட்டில் அவ்வாறான எவ்வித பயங்கரவாத அவதானமும் இல்லை என்றும் பெய்யான மற்றும் திரிவுபடுத்தப்பட்ட காரணங்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன நேற்று(22) வெளியிட்ட ஊடக அறிக்கை