தேங்காய்க்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

தேங்காய்க்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேங்காய்க்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று, நுகர்வோர் சேவை அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை விலையான 75 ரூபாயை நீக்குவதற்கு, நுகர்வோர் சேவை அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

போட்டிமிக்க சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவே தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.