இலங்கையின் கிரிக்கெட் மைதானத்தில் சங்கக்காரவின் பெயர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பல்லேகல சர்வதேச மைதான அரங்குக்கு குமார் சங்கக்கார பெயரை சூட்டி அவரை கௌரவிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

மேலும், முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பெயர்கள் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் 3 அரங்குகளுக்கு சூட்டி கௌரவிக்கப்படவுள்ளது.

இதேநேரம், பல்லேகல சர்வதேச மைதானத்தின் அரங்குகளுக்கு சொந்த ஊர் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படவுள்ளன.