சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமயகத்தில் பதில் கட்சி தவிசாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

இதன்போது, ஒழுக்க விதிகளை மீறியவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கொள்கை ரீதியாக இணக்கப்பாடு ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசியல் நிலவரம், கட்சியின் மீளமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.