(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சகல தேர்தல்கள் தொகுதிகளிலும் உள்ள மக்களை சந்திப்பதற்காக தாம் அவர்கள் அருகில் செல்வதற்கு தயாராகவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய பகுதியில் நேற்று(05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்து 24 மணித்தியாலத்துக்குள் வழங்க கூடிய சகல தீர்வுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முழு நாட்டு மக்களையும் பாதுகாக்கும் ஜனாதிபதியையே பொதுமக்கள் தெரிவு செய்யவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.