
முதல் முறையாக அரசினால் loyalty card நாளை அறிமுகம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் முதல் முறையாக அரசு நடத்தும் எஃப்.எம்.சி.ஜி (FMCG) (வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள்) (Fast-Moving Consumer Goods) லோயல்டி அட்டை நாளை(08) முதல் அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக வாணிப கைத்தொழில் கூட்டுறவு, நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.
நாட்டின் மிகப்பெரிய சில்லறை சூப்பர் மார்க்கெட் சங்கிலியில், லங்கா சதொச லிமிடெட் (LSL) போட்டியைச் சந்திக்கும் போது தனது வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்துவதற்கான இந்த முக்கிய முயற்சியை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.