ஜனாதிபதி தேர்தல் – 3214 முறைப்பாடுகள் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 3214 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 25 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ​தேர்தலுடன் தொடர்புடைய 96 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் ஶ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.