சிறைக் கைதிகளுடன் கலந்துரையாடல் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 மரண தண்டனை கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆரம்பித்துள்ள போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அவர்களுடன் கலந்துரையாட வேண்டிய தேவைகள் இல்லை என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரோயல் பார்க் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இவர்கள் கடந்த 11 ஆம் திகதி முதல் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்திருந்தார்.