அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(15) மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று(14) முதல் மூடப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.