பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனத்தை இழந்துள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் நிலையில் இருந்து ஷானி அபேசேகரவை நீக்கியமை தொடர்பில் சிவில் குழுக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

இவரே குற்றப்புலனாய்வுத்துறையின் விசாரணைகளுக்கான பணிப்பாளராக செயற்பட்டு வந்தார். இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்றதும் அவர் பதவி இடமாற்றம் வழங்கப்பட்டு காலி பொலிஸ் அதிபரின் பிரத்யேக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நடவடிக்கையை இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் கண்டித்துள்ளதோடு, குறித்த விடயத்தில் பொலிஸ் ஆணைக்குழு தமது சுயாதீனத்தை இழந்துள்ளது என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.