பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் விநியோகிக்க திட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம், முதல் வாரத்திற்குள் நிறைவுசெய்யப்படும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.