(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து அத்துமீறி உள் நுழைந்துள்ளனர்.
அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே குறித்த தடை, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.