மின்சாரம் தாக்கி பலி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த  22 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தைக்குச் சொந்தமான அரிசி ஆலைக்கு  இன்று காலை வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.