(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வில்பத்து சரணாலயம் மற்றும் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தம் மீது சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

