ஜனாதிபதி கோட்டாபயவுடன் சஜித்? ரணில் ஓய்வு பெறுவார்…

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டை கொண்டு செல்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் வைத்து இக் கருத்தை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், சஜித் பிரேமதாஸ பிரதமராவதற்கான சூழ்நிலை அதிகமாகக் காணப்படுகிறது
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸ வரவேண்டும் என்பதையே பெரும்பான்மையான கட்சியின் உறுப்பினர்கள் விரும்புவதாகவும் எனவே, இதற்கு செவி சாய்த்து ரணில் விக்ரமசிங்க முடிவொன்றை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஓய்வுப் பெறுவார் என நாம் எதிர்ப்பார்க்கிறோம். எனவும் தெரிவித்தார்.