ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டமானது விஷேட கூட்டமாக நடைபெறவுள்ளது.
இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என தகவல் வட்டாரங்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட தற்போதைய அரசியல் சூழ்நிலைமைகள் தொடர்பில் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
(riz)