(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தனிப்பட்ட விஜயமாக இந்தியா சென்றுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஊட்டியில் ஓய்வெடுத்து வருகின்றார்.
இந்நிலையில், அவர் அங்கு பல்வேறு சுற்றுலா இடங்களுக்கும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு நேற்று ரணில் விக்ரமசிங்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, குன்னுாரில் படகு சவாரி செய்ய முடியாமல் ரணில் விக்ரமசிங்க ஏமாற்றத்துடன் திரும்பியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி பல்வேறு வகையான பிரச்சிணையை எதிர்நோக்கியுள்ள நிலையில் கட்சியின் தலைவர் பொறுப்பு அற்ற விதமாக ஓய்வு எடுப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.