ரயில் பெட்டிகள் விலகி சென்ற சம்பவம் – விசாரணைகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)- பாணந்துறை மற்றும் வாத்துவைக்கு இடையில் ரயிலின் சில பெட்டிகள் விலகி சென்ற சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த ரயில் நேற்று(27) மாலை 6 மணியளவில் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கி பயணித்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த ரயிலிலிருந்து பிரிந்து சென்ற பயணிகள் பயண பெட்டிகள் ரயில் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு வழமைபோல் ரயில் சேவையை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.