ரயில்வே பாதுகாப்பு சேவைக்கு 180 புதிய அதிகாரிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே பாதுகாப்பு சேவையில் 180 புதிய அதிகாரிகளை இணைத்துக் கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று(29) இடம்பெற்ற எழுத்துப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, புதிய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என, ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.