விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியூதீனிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மூன்று மணிநேரம், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.