பா.உறுப்பினர் கே.கே.மஸ்தானை வாள்களால் தாக்க முயற்சி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மீது நேற்று இரவு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா, பாவற்குளம் பகுதியில் மக்கள் சந்திப்புக்களை முடித்து கே.கே.மஸ்தான் வவுனியா நோக்கி சென்றுள்ளார்.

இதன்போது அப்பகுதியில் நின்ற சிலர் வாள்களால் கே.கே.மஸ்தானை தாக்க முயற்சித்துள்ளனர்.

இதேவேளை, பாதுகாவலர்கள் தாக்குதல் முயற்சியை தடுக்க முற்பட்ட போது, பாதுகாவலரின் கைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.