ராகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | ராகம) – ராகம கென்தலியத்தபாலுவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நீதவான் விசாரணைகள் இன்று(02) முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(01) இரவு அடையாளந்தெரியாத நபரால் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில், மத்தேகொட பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.