(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மக்கள் ஆஸி தலைநகரான கென்பேராவில் இருந்து இடம்பெயர்ந்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், குறித்த தீயில் சுமார் 08 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதோடு, இதில் கிழக்கு கிப்ஸ்லன்ட் பகுதியில் 43 வீடுகளும் நியூசவுத் வேல்சில் 200 வீடுகளும் தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
புதுவருட தினத்தில் சுமார் 112 இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.