(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படாவிட்டால் பொதுத்தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவோம் என சஜித் ஆதரவு அணி உறுப்பினரான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
புதிய கூட்டணிக்கு சஜித் தலைமை தாங்குவார் என்றும், ஏனைய கட்சி தலைவர்களும் இது தொடர்பில் விரைவில் பேச்சு நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.
சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைமைப் பதவியை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துவருகிறார்.
இந்நிலையிலேயே சஜித் அணி மாற்றுவழி குறித்து பரீசிலித்துவருகின்றது.