அரசியல் சட்ட திருத்த நிபுணர் குழுவின் தலைவராக பிரதமர் ரணில்

அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் நிபுணர் குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவில், பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பிரிவின் முன்னாள் தலைவர் எம்.ஓ.எ டீ சொய்சா மற்றும் டாக்டர் ஜயம்பதி விக்கிரமரட்ன ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அரசியலமைப்பில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில், அரசியலமைப்பு உருவாக்கப்பட இருக்கின்றது.

எதிர்வரும், ஓராண்டு காலப்பகுதியில், புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கம் உள்ளதாக அண்மையில் பிரதமர் கூறியிருந்தமை குறிப்பிடதக்கது.

(riz)