விட்டு ஓடிவிடுங்கள் ஈரான் அறிவிப்பு; அமெரிக்க இராணுவம் மீது பொழிந்த ரொக்கெட் மழை [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு இராணுவ தளங்கள் மீது ஈரான் 10க்கும் மேற்பட்ட ​ரொக்கெட்டுகளால் தாக்குதல் நடத்தியதை பென்டகன் உறுதிப்படுத்தியது.

தெஹரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அன்பர் மாகாணத்தில் உள்ள ஐன் அல்-ஆசாத் தளத்திலும், புதன்கிழமை அதிகாலை எர்பில் தளத்திலும் ​ரொக்கெட்டுகள் வீசப்பட்டன.

இந்த தாக்குதலை அமெரிக்க அதிகாரி உறுதிப்படுத்தியுள்ள நிலையில் மிகக் குறைவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய தொலைத்தொடர்பு அமைச்சர் முகமது-ஜாவாத் அசாரி ஜஹ்ரோமி, எங்கள் பிராந்தியத்தை விட்டு ஓடிவிடுங்கள்! என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஈராக்கில் அமெரிக்க மீது ஈரானின் தாக்குதல்கள் முதல் நடவடிக்கையாகும், தெஹ்ரான் அமெரிக்க படைகளை விட்டு விடாது என்று ஈரானிய ஐஆர்ஜிசி படை தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் தனது ‘இரண்டாவது கட்ட’ தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது என்று ஈரான் உள்ளுர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அல்-ஆசாத் தளத்தில் ஐஆர்ஜிசி நடத்திய ஏவுகணை தாக்குதல் வீடியோவை ஈரான் ஊடகம் வெளியிட்டுள்ளது.